TamilsGuide

கனடா மருத்துவமனையில் செவிலியர் மீது தாக்குதல்

கனடாவின் கியூபெக் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மனநல அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர் ஒருவர், கோபமடைந்த நோயாளி ஒருவரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

'CHU de Québec-Université Laval' மருத்துவமனையில் பணிபுரியும் பாட்ஸி வான் டேம் என்ற செவிலியர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்த அதிர்ச்சி சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.

நோயாளி ஒருவர் தனது சக ஊழியரைத் தாக்க முயன்றபோது, அவரைக் காப்பாற்ற வான் டேம் இடையூறாகச் சென்றுள்ளார். அப்போது அந்த நோயாளி வான் டேமைப் பிடித்துக்கொண்டு, அவரது முடியைப் பிடித்து இழுத்து, கழுத்தை நெரிக்க முயன்று சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

"அவர் தனது முழு பலத்தையும் கொண்டு என்னை அடித்தார். எனது சக ஊழியர் மிகுந்த சிரமத்திற்கு இடையே தப்பித்துச் சென்றுவிட, நான் மட்டும் அந்த நோயாளியிடம் தனியாகச் சிக்கிக் கொண்டேன்" என்று கூறிய வான் டேம், "நான் நரகத்தை அனுபவித்தேன். என் உயிருக்கே பயந்து நடுங்கினேன்" எனத் தனது காயமடைந்த முகத்தைச் சுட்டிக்காட்டி வேதனையுடன் தெரிவித்தார்.

நிதி குறைப்பு காரணமாக மனநலப் பிரிவில் பிரத்யேகப் பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்படாததே இந்தத் தாக்குதலுக்கு முதன்மைக் காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நிதிகள் எதுவும் களத்தில் பணிபுரியும் எங்களுக்கு வந்து சேருவதில்லை; அதிகாரிகளின் முடிவுகளுக்கானப் பலனைத்தான் நான் என் காயங்கள் மூலம் அனுபவிக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

Leave a comment

Comment