கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராக் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்ஸிக்'
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் போர்த்துகீசிய ஆட்சின்கீழ் இருந்த கோவாவை பின்னணியாகக் கொண்டு அமைந்துள்ளது.
இப்படத்தில் யாஷ் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் கிட்டத்தட்ட ரூ 600 முதல் 800 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் 26 அன்று உலகமெங்கும் சுமார் 12,000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் ஆன்லைன் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 21) அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளது.


