TamilsGuide

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு – சபையில் பிரதமர்

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் உலகளாவிய மசகு எண்ணெய் விலைகள் மற்றும் இறக்குமதிச் செலவுகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று (21) எழுப்பப்பட்ட வாய்மொழி வினாவுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இத்தகவலை வெளியிட்டார். 

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் 3,168 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2025-ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இச்செலவு 1,995 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், அந்தக்காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்திற்கான எரிபொருள் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதையும் வலியுறுத்தினார்.

Leave a comment

Comment