கட்டாய உழைப்பாளிகள் அடங்கலான நவீன அடிமைமுறைக்கு உட்பட்டவர்கள் இலங்கையிலேயே கிட்டத்தட்ட 139, 000 அளவில் உள்ளதாக 2021ஆம் ஆண்டின் Walk Free அமைப்பின் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் நவீன அடிமைமுறை சார்ந்த பாதிப்பு 56% அளவில் காணப்படுவதாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு அமெரிக்க தொழில் திணைக்களத்தின் இலங்கைக்குரிய 2022ஆம் ஆண்டின் கண்டறிதலில், இலங்கையில் கட்டாய உழைப்பாளிகளாக உள்ள சிறுவர்களின் மோசமான நிலைகளையும் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இலங்கையில் கட்டாயத் தொழிலாளிகளாகப் பயன்படுத்தப்படுபவர்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் தெரிவித்துள்ளார்.


