TamilsGuide

4 வயது சிறுமியைத் தாக்கி ஆளரவமற்ற இடத்தில் வீசிச் சென்ற தாய் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் கைது

4 வயதுச் சிறுமியைக் கொடூரமாகத் தாக்கி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கைவிட்டுச் சென்ற தாய் மற்றும் அவருக்கு உதவிய முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஆகியோரை ஹலி எல பொலிஸார் இன்று (14) காலை கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் (13) வத்தேகம, யதிராவன வீதியில் ஆளரவமற்ற பகுதியில் சிறுமி ஒருவர் தனியாகக் கைவிடப்பட்டுக் கிடப்பதாகப் பொலிஸ் அவசரப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வத்தேகம பொலிஸார், காயங்களுடன் மீட்கப்பட்ட அச்சிறுமியைத் தமது பொறுப்பில் எடுத்தனர்.

காலை 7 மணியளவில் முச்சக்கர வண்டியொன்றில் வந்த நபர்களே சிறுமியை அங்கு வீசிச் சென்றுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணைகளின் முடிவில், குழந்தையைக் கொடூரமாகத் தாக்கி வீசிச் சென்ற பிரதான சந்தேகநபர் அச்சிறுமியின் தாய் என்பதும், அவருக்கு உடந்தையாக இருந்தவர் முச்சக்கர வண்டி ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த ஹலி எல பொலிஸார், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment