குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, இன்று (11) காலை கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் பாதிக்கப்பட்டன.
எனினும், கணினி அமைப்பைச் சீர்செய்து இயல்பு நிலையை விரைவில் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்.


