அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையும், அவரது நீண்டகால பிரதிநிதியுமான ஜார்ஜ் ஹொராசியோ மெஸ்ஸி நீண்டகால நோய்க்குப் பிறகு தனது 68-வது வயதில் காலமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பக்கால வளர்ச்சி
ஜூன் மாதம் லியோனல் மெஸ்ஸி ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது, ஜார்ஜ் மெஸ்ஸி மருத்துவ சிகிச்சை பெற்று வருவதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியதோடு, இதுகுறித்த தகவல்களில் தனியுரிமையையும் மனிதாபிமானத்தையும் பேணுமாறு ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
மெஸ்ஸியின் ரொசாரியோவின் ஆரம்பக்கால வளர்ச்சி முதல் பார்சிலோனா கால்பந்து கழகத்தின் வெற்றிப்பயணம் வரை அவரது தொழில்முறை வாழ்க்கையில் ஜார்ஜ் மெஸ்ஸி முக்கியப் பங்காற்றியதாக தெரியவருகிறது.
மெஸ்ஸியின் பிரதிநிதியாக செயல்பட்டு, களத்திற்கு வெளியே நடைபெற்ற பெரும்பாலான பேச்சுவார்த்தைகளையும் விவகாரங்களையும் அவரே கையாண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
மறைந்த ஜார்ஜ் மெஸ்ஸிக்கு அவரது மனைவி செலியா குசிட்டினி மற்றும் லியோனல், ரோட்ரிகோ, மடியாஸ், மரியா சோல் ஆகிய நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


