TamilsGuide

புங்குடுதீவில் ரூபா 45 இலட்சம் செலவில் அந்தியேட்டி கிரியை மண்டபம் திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு ஐயனார் ஆலயம் முன்பாக அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் ரூபா 45 இலட்சம் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அந்தியேட்டி கிரியை மண்டபம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது.

அமரர்கள் நல்லதம்பி அகிலேஸ்வரன் மற்றும் அவரது பாரியார் அகிலேஸ்வரன் லோகேஸ்வரி ஆகியோரின் ஞாபகார்த்தமாக இம்மண்டபம் அவர்களது பிள்ளைகளின் நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய மண்டபம்இ அந்தியேட்டி உள்ளிட்ட இறுதிக்கிரியைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மதச் சடங்குகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புங்குடுதீவு மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பல குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.

தமது பெற்றோரின் நினைவை நிலைநிறுத்தும் நோக்கிலும் சமூக நலப்பணிக்கான பங்களிப்பாகவும் இம்மண்டபத்தை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கியுள்ள அவர்களது பிள்ளைகளின் செயல் அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
 

Leave a comment

Comment