களுத்துறை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கொண்டு வந்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவதோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஹொரணையை சேர்ந்தவர்களாவர் .
மில்லனியா-பதாகோடா சாலையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக களுத்துறை சிறையில் உள்ள தங்கள் சகோதரனை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரு சந்தேக நபர்களை பொலிஸார் கண்டறிந்தனர்.
அவர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தை காரணமாக, மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது.
இதன்போது , மிளகாய் விழுது கலந்த இரண்டு பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பொலிதீன் உறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12,400 மில்லிகிராம் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையில், சந்தேக நபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கைபேசியும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் மீது போதைப்பொருள் தொடர்பான பல முந்தைய நீதிமன்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து அங்குருவதோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


