TamilsGuide

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்

இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கேரள கஞ்சாவைக் கடத்த முயன்ற மூன்று பேரை ராமநாதபுரத்தில் இந்தியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து சுமார் 292 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா சரக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இரகசியத் தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், கஞ்சா மூட்டைகளைச் சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கடற்கரைக்கு எடுத்துச் செல்லத் தயாராக இருந்தபோது அவர்களைக் கையோடு பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இந்தப் பெருமளவிலான கஞ்சா சரக்கு இலங்கைக்குக் கடத்தப்படவிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

Leave a comment

Comment