அவுஸ்திரேலியாவுக்கான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பிச் செலுத்துதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோசடி குறித்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக, நாடாளுமன்றம் ஆகஸ்ட் 5 அன்று ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தவுள்ளது.
எதிர்க்கட்சியால் முன்மொழியப்பட்ட இந்த விவாதம், நாடாளுமன்றப் பொதுச் செயலாளர் குஷானி ரோஹனதீராவின் தகவலின்படி, ஆகஸ்ட் 5 காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
இதற்கிடையில், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான நாடாளுமன்ற அலுவல்கள் குழு எடுத்த முடிவுகளின்படி, நாடாளுமன்றம் ஆகஸ்ட் 4 முதல் 7 வரை கூடவுள்ளது.


