TamilsGuide

கடும் வெப்பத்தால் பிரான்ஸ் வனவிலங்குகளுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக வனவிலங்கு பாதுகாப்பு மையங்கள் மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச விலங்கு நல நிதியம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகள் பாதிக்கப்பட்டு, வீதிகளில் மயங்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பிரான்ஸில் உள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமான வனவிலங்கு பாதுகாப்பு மையங்கள் தங்களது அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், இதனால் புதிய விலங்குகளை பொறுப்பேற்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், காட்டுத்தீ மற்றும் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க முடியாமல் பல விலங்குகள் உயிரிழந்து வருவதாகவும், இதனால் மீளப்பெற முடியாத இயற்கை இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் சூழலியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக அதிகரித்து வரும் வெப்ப அலைகள், வனவிலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் உயிரினப் பாதுகாப்பில் பெரும் சவால்களை ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
 

Leave a comment

Comment