TamilsGuide

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து விபத்து – இருவர் படுகாயம்

கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

தன்னாமுனையில் இரண்டு மதில்கள் ஒரு வர்த்தக நிலையத்தினை உடைத்துச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதியின் நித்திரை கலக்கமே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ள ஏறாவூர் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
 

Leave a comment

Comment