கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையான ரயில் சேவைகள் இன்று (24) மீண்டும் தொடங்குகின்றன.
இதன்படி, இந்த ரயில் தினமும் பிற்பகல் 3.50 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு தலைமன்னார் ரயில் நிலையத்தை சென்றடையும்.
‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ரயில் பாதைக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக தலைமன்னார் வரையான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
எனினும், அனுராதபுரம் புதிய நகர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, இந்த ரயில் அங்கு நிறுத்தப்படாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


