கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று (23) வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
அறிவுறுத்தலின்படி, மனித உடல் உணரும் வெப்பநிலையை குறிக்கும் வெப்பச் சுட்டெண் (Heat Index) பகல் நேரத்தில் சில பகுதிகளில் “எச்சரிக்கை நிலை” (Caution Level) வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் போதியளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும், முடிந்தவரை நீண்ட நேரம் நேரடி சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்கவும், நாளின் அதிக வெப்பமான நேரங்களில் கடினமான வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும் வானிலை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


