TamilsGuide

ஜனாதிபதி தலைமையில் பொதுச் சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா

இலங்கையின் பொதுச் சுகாதார சேவையின் பெருமைமிக்க நூற்றாண்டு விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

1926ஆம் ஆண்டு களுத்துறையில் தெற்காசியாவின் முதல் கள சுகாதாரப் பிரிவு நிறுவப்பட்டதன் மூலம் இலங்கையின் பொதுச் சுகாதார சேவை ஆரம்பமானது. தற்போது 362க்கும் மேற்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை உள்ளடக்கிய வலையமைப்பாக இது வளர்ச்சியடைந்துள்ளது.

இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், கடந்த 100 ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார சேவையின் மேம்பாட்டிற்கு பங்களித்த 36 சமூகச் சுகாதார தொழில்முறைக் குழுக்கள் கௌரவிக்கப்பட்டன. மேலும், நூற்றாண்டு நினைவு மலர் மற்றும் எதிர்கால பொதுச் சுகாதார சேவைக்கான வெள்ளை அறிக்கையையும் ஜனாதிபதி வெளியிட்டு வைத்தார். 

Leave a comment

Comment