தம்பதீவம் மற்றும் தாய்லாந்துக்கு மேற்கொள்ளப்படும் மத யாத்திரைகளைத் தடை செய்ய தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான எந்தவொரு கருத்தையும் அமைச்சர் வெளியிடவில்லை என அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்ட சில தரப்பினர் இலங்கையின் சமூக, அரசியல் மற்றும் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் நோக்கில் இவ்வாறான போலியான செய்திகளைப் பரப்பி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


