கனடாவின் செவர்ன் நகரியத்தில் உள்ள ஒரு நீர்நிலைப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய 'சயனோபாக்டீரியா' இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் பூங்காக்கள் அமைச்சகம் நடத்திய சோதனைகளின்படி, இந்த ஆபத்தான பாக்டீரியா ஸ்பாரோ ஏரியின் தென்மேற்கு கடற்கரைப் பகுதியில் படர்ந்து வளர்ந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
'நீல-பச்சை பாசி' என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த உயிரினம், நச்சுக்களை உற்பத்தி செய்யக்கூடியது.
இந்த பாசிகள் இருக்கும் இடங்களில், ஏரி நீர் பெரும்பாலும் "நீல-பச்சை" நிறத்திலோ, பச்சை பட்டாணி சூப் போன்றோ அல்லது டர்க்கோயிஸ் பெயிண்ட் போன்ற அடர் நிறத்திலோ காட்சியளிக்கும் என்று செவர்ன் நகராட்சி தெரிவித்துள்ளது.
எனவே, ஏரியின் நீர் இத்தகைய நிறங்களில் காணப்படும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நச்சுப் பாசிகள் கலந்த தண்ணீரைத் தொடுவதாலோ அல்லது உட்கொள்வதாலோ உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


