TamilsGuide

24 மணி நேரத்தில் மூன்றாவது முறை... ஈரானை கொடூரமாக தாக்கும் அமெரிக்கா

ஈரான் மீது மற்றொரு கட்ட தாக்குதலை தொடங்குவதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது; இது 24 மணி நேரத்தில் நடத்தப்படும் மூன்றாவது தாக்குதலாகும்.

அசாதாரணமான நடவடிக்கை:

இரவு முழுவதும் டஜன் கணக்கான இலக்குகளை தாக்கிய தொடர் தாக்குதல்களை நடத்தியதாகவும், பின்னர் பகல் நேரத்தில் ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியதாகவும் ராணுவத்தின் மத்திய கட்டளை பிரிவு தெரிவித்தது.

இது தாக்குதல்களின் வேகம் அதிகரித்து வருவதை மேலும் உணர்த்தும் ஒரு அசாதாரணமான நடவடிக்கை ஆகும்.

ஏவுகணை தாக்குதல்:

புதன்கிழமை பிற்பகுதியில் மற்றொரு கட்ட தாக்குதல் தொடங்கியது; இது 24 மணி நேரத்தில் நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் ஆகும்.

இதைத் தொடர்ந்து ஈரானின் துறைமுகங்கள் மீது மீண்டும் விதிக்கப்பட்ட முற்றுகையை மீற முயன்ற எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பலை செயலிழக்க செய்ய ஏவுகணைகளை ஏவியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment