TamilsGuide

விருப்பமே இல்லாமல் அழுதுகொண்டே நடித்த தனுஷ் - அவரது அப்பா போட்டுடைத்த விஷயம்

விருப்பமே இல்லாமல் அழுதுகொண்டே நடித்த தனுஷ்.. அவரது அப்பா போட்டுடைத்த விஷயம்

தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவரது நடிப்பு திறமைக்காகவே அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது ஓம் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். அந்த படத்தின் டீஸர் வெளியான நிலையில் அது புஷ்பா படம் போல செம்மர கடத்தல் கதை தானா என விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் தனுஷ் பற்றி பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்றை அவரது அப்பா கஸ்தூரி ராஜா தெரிவித்து இருக்கிறார்.

விருப்பமே இல்லாமல்..

"செல்வராகவன் சினிமாவை பிடித்து வந்தார். ஆனால் தனுஷ் அப்படி இல்லை, அவர் சினிமா பிடித்து வரவில்லை. துள்ளுவதோ இளமை படத்தின் ஷூட்டிங்கில் எப்போதும் அழுதுகொண்டே தான் நடிப்பான்."

"ஐந்தாறு படங்கள் நடிக்கும் வரை 'என்னை விட்ருங்க போயிடுறேன்' என்று தான் சொல்வார்" என கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.  

Leave a comment

Comment