தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நட்சத்திரங்களான நடிகர்கள் அதர்வா, கவின் ஆகியோர் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து முதலமைச்சரைச் சந்தித்து வருவது கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போதைய டிரெண்டாக மாறியுள்ளது.
நடிகர் அதர்வா முரளி நடிப்பில், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள 'இதயம் முரளி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தையநாளான நேற்று, தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு குறித்து நடிகர் அதர்வா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, "மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை சந்தித்தது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவர் எப்போதும் நமது சொந்த 'விஜய் அண்ணா' தான். எனது வாழ்வின் இந்த முக்கிய நாளுக்கு முன்பாக, அவரிடமிருந்து அன்பையும் ஆசியையும் பெற்றது எனக்கு உலகத்தையே வென்றது போன்ற உணர்வைத் தருகிறது. மிக்க நன்றி அண்ணா! இந்த சந்திப்பால் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயுள்ளேன். மிகுந்த நன்றியுடனும், அசுரத்தனமான நேர்மறை ஆற்றலுடனும் இருக்கிறேன்" என மிகவும் எமோஷனலாகப் பதிவிட்டுள்ளார்.


