இயற்கையான ஆபரணங்களை அணிந்து நடந்த அயலி சீரியல் நடிகரின் திருமண நலங்கு..
சினிமா
சீரியல் நடிகை சியாமந்தா மற்றும் நடிகர் ஆனந்த் செல்வன் ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணம் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நடிகை சியாமந்தா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' சீரியலில் நடித்து வருகிறார். மேலும், நடிகர் ஆனந்த் செல்வன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'அயலி' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகர் ஆனந்த் செல்வன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் திருமண நலங்கு சடங்கில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், "Our Nalangu came with 100% organic jewelry" என அவர் குறிப்பிட்டுள்ளார்.






















