TamilsGuide

கனடாவில் தடம்புரண்ட சரக்கு ரயில் - சில தகவல்கள்

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நேற்று மாலை 4.30 மணியளவில், கியூபெக் மாகாணத்திலுள்ள மொன்றியல் நகரில் Le Gardeur என்னுமிடத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டது.  

ரயிலுடன் இணைக்கப்பட்டிருந்த டேங்கர்கள் சரிய, ஒரு சாலையில் வாகனங்கள் பயணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 2,600 பேர் இருளில் தவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

என்றாலும், ரயில் தடம்புரண்டதில் யாருக்கும் உயிர்ச் சேதமோ காயமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், ரயிலில் கொண்டுவரப்பட்ட டேங்கர்களில் அபாயகரமான ரசாயனங்கள் எதுவும் இல்லாததால் அசம்பாவிதங்கள் எதுவும் நேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment