• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காத்தான்குடி, பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

இலங்கை

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் றிஸ்வி நகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவின் றிஸ்வி நகர் பகுதியில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய முகம்மது அன்ஸார் எனும் குடும்பஸ்தரே தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்ததாக , காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எல். புகார்தீன் சடலத்தை நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து , உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply