• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி

இலங்கை

வவுனியா வடக்கு – நெடுங்கேணி, ஒலுமடுப்பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (29) இன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.

குறிப்பாக இச்சந்திப்பில் கிராமத்தின் அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு மக்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அத்தோடு ஒலுமடு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பான முக்கிய விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், கிவுல் ஓயா ஆக்கிரமிப்பு சாரந்த விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் ‘தித்வா’ பேரிடரின்போது ஏற்பட்ட நெற்செய்கை அழிவுகளுக்கான இழப்பீடுகள் இதுவரை வழங்கப்படவில்லை என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் மக்களால் முறையீடுசெய்யப்பட்டதுடன், நயினாமடு ஸ்ரீ ஆதி ஞானவைரவர் ஆலயத்தின் சீரமைப்புப்ப பணிகள் தொடர்பிலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply