TamilsGuide

அம்பாறை நோக்கி பயணித்த பேருந்து வெல்லம்பிட்டியாவில் விபத்து – சாரதி உயிரிழப்பு

இன்று காலை அம்பாறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்து, சாரதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வெல்லம்பிட்டியாவில் விபத்துக்குள்ளானது.
பொலிஸாரின் தகவலின்படி, 44 வயதுடைய சாரதி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
இன்று (24) காலை 5.30 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்ட பேருந்து, அம்பகஹா சந்திக்கு அருகில் சாலையை விட்டு விலகிச் சென்று பேருந்து நிறுத்தம், தொலைபேசி கம்பம், கதவு, மதில் மற்றும் பேருந்தின் முன்பகுதிக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.
விபத்து நேரத்தில் பேருந்தில் சுமார் 50 பயணிகள் இருந்த போதிலும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment