TamilsGuide

ட்ரம்ப்பின் அடாவடி பேச்சு - வம்​புக்கு இழுத்​த பிரதமர் மெலோனி

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது நண்​பர்​களைப் பகைத்​துக் கொண்டு எதிரிகளுக்​குப் பணிந்து போகிறார் என இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறியுள்ளார்.

பி​ரான்​சில் நடை​பெற்ற ஜி7 மாநாட்​டில் பங்​கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இத்​தாலி டி.​வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இத்​தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி என்​னுடன் போட்டா எடுக்​கக்கெஞ்​சி​னார். அவர் மீது பரி​தாபப்​பட்டு போட்டோ எடுத்​துக் கொண்​டேன் என்​றார்.

இதற்கு பதில் அளித்த மெலோனி, நட்பு நாடுகளின் தலைவர்களைப் பற்றி அவதூறு கருத்​துகளை ட்ரம்ப் கூறு​வது இது முதல் முறையல்ல. அவர் ஒரு விஷ​யத்தை நினை​வில் கொள்ள வேண்டும்.

நானும் இத்​தாலி​யும் ஒரு​போதும் கெஞ்​சுவ​தில்​லை என பதிலடி கொடுத்​தார். இந்​நிலை​யில், சமீபத்​தில் அளித்த பேட்​டி​யில், டிரம்ப் பொய் பேசுகிறார், தனது நண்​பர்​களைப் பகைத்​துக் கொண்டு எதிரிகளுக்​குப் பணிந்து போகிறார்.

அமெரிக்​கா​வில் நவம்​பர் மாத இடைக்​காலத் தேர்​தல் நெருங்கி வரு​கிறது. அதில் டிரம்ப் தனக்கு கிடைக்​கும் வாக்​கு​களைப் பார்க்க வேண்​டும். அவரது ஆதரவு புதிய உச்​சகட்ட சரிவைச் சந்​தித்​துள்​ளது என கூறி அதிபர் ட்ரம்ப்பை வம்​புக்கு இழுத்​துள்​ளார்.

இது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​புடன், ஒரு பெரிய சண்​டையை எதிர்​கொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி தயா​ராவதை காட்​டுகிறது.
 

Leave a comment

Comment