TamilsGuide

ஜி7 மாநாட்டில் ஹார்மஸ் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி 

பிரான்ஸின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் சிறப்பு அமர்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்கள் உலக வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து கவலை தெரிவித்தார்; மேலும், இதில் இந்தியக் குடிமக்கள் மற்றும் மாலுமிகள் உயிரிழந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் முன்னிலையில் பேசிய மோடி, ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஏற்படும் இடையூறுகள் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கின்றன என்று கூறினார். அத்துடன் கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

"மேற்கு ஆசியாவில் அமைதி முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம். இப்பகுதியில் உள்ள நட்பு நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த மோதல், உயிர் மற்றும் உடைமை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கடல்சார் வர்த்தகத்தில் ஏற்படும் இடையூறுகள் உலக பொருளாதாரத்தை மோசமாக பாதித்துள்ளன. இதில் பல இந்திய குடிமக்களும் தங்கள் உயிரை இழந்துள்ளனர்," என்று பிரதமர் கூறினார்.

"உலகளாவிய கடல்சார் வர்த்தகம் மூலம் நாடுகளை இணைக்கும் மாலுமிகளின் பாதுகாப்பு நமது பொறுப்பாகும். கடல் வழித்தடங்கள் பாதுகாப்பானதாக இருப்பதையும், மாலுமிகள் எவ்வித அச்சமும் இன்றி தங்கள் பணிகளை மேற்கொள்ள முடிவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்," என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment