• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு

இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இரு சிறுவர்கள் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் (15) நடைபெற்றது.

அதன்போது புதிதாக 05 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சிறுவர்கள் குழந்தையின் என்புக்கூடுகள் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மீட்கப்படும் என்புக்கூடுகள் பல உடைந்த நிலையில், நேர்சீரின்மையான நிலையில் காணப்படுகின்றன.

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 360 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 351 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
 

Leave a Reply