தமிழ்நாட் முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா கடந்த டிசம்பர் மாதம் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதன்பின் இரண்டு முறை நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்ட நிலையில், இன்று ஜூன் 15-ஆம் தேதி 4-வது முறையாக விசாரணை தொடங்கியது.
இன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் ஆஜராக விஜய் - சங்கீதா தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் ஆஜராக வேண்டும் என்றால் இரு தரப்பினரும் இமெயில் ஐடி-யை சமர்ப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வருகிற ஆகாஷ் 7-ஆம் தேதிக்கு அடுத்த விசாரணை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


