TamilsGuide

எதிர்க்கட்சியின் கடிதம் சபாநாயகரிடம் கையளிப்பு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலவும் நீதிபதி பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கவனம் செலுத்தி, அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கக் கோரி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று (12) நாடாளுமன்றத்தில் வைத்து இக்கடிதம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment