நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஒவ்வொரு திரைப்படம் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்பும், படம் வெற்றி பெற்ற பின்பும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி கடைசியாக அவர் எடுத்த ‘தாய் கிழவி’ படம் வெற்றிபெற்ற பின்பு திருச்செந்தூர், பழனி கோவிலில் வழிபாடு நடத்தினார்.
அதனையடுத்து இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தனது மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தார். மலைக்கோவிலுக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன் மனமுருக வழிபட்டார்.
அவருடன் ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


