ஈரானிடமிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளியே எடுப்பதற்குத் தனக்கு எந்தவொரு ஒப்பந்தமும் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்நாட்டுடன் ஒரு புதிய ஒப்பந்தம் மிக விரைவில் எட்டப்படவுள்ளதாக அவர் பலமுறை சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தநிலையில், யுரேனியத்தை அங்கிருந்து அகற்றுவதற்கு இப்போது ஒப்பந்தம் எதுவும் தேவையில்லை என்று அவர் கூறியிருப்பது மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இதேவேளை, வரும் ஜூலை மாதம் துருக்கியின் அங்காராவில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் தான் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறியுள்ள ட்ரம்ப், தனது நேட்டோ கூட்டாளி நாடுகளுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான போரில் நேட்டோ கூட்டாளிகள் தனக்கு உதவிக் கரம் நீட்டியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் அவர்களை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


