TamilsGuide

முச்சக்கர வண்டியில் மரம் முறிந்து விபத்து - மாணவர் உட்பட மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டிய, மபகந்த பிரதான வீதிக்கு அருகே இருந்த மரம் ஒன்று முச்சக்கர வண்டி மீது சரிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவரும், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

முச்சக்கர வண்டி சாரதி விபத்தில் இருந்து உயிர் தப்பியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மரம் விழுந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Leave a comment

Comment