TamilsGuide

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பயணத் தடை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் காரணமாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிவான் பாசன் அமரசேன, இந்த உத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகளில் சுரேஷ் சல்லே ஒரு சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
 

Leave a comment

Comment