• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு

இலங்கை

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் வெசாக் தின நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம்(30) காலை 10.00மணிக்கு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் வணக்கத்துக்குரிய பௌத்த மதகுரு ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ அவர்கள் கலந்துகொண்டு வெசாக் தினம் தொடர்பாக ஆசியுரை வழங்கியபோது, பெளத்தம் இந்தியாவில் தோற்றம் பெற்றதாகவும், புத்த பெருமான் பிறப்பு, ஞானம் அடைந்த மற்றும் முக்தி அடைந்த தினமே வெசாக் பௌர்ணமி தினம் எனவும், புத்த பகவான் விஷ்ணுவின் அவதாரமாக பெளத்த மக்களால் கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், உலகத்தின் அனைத்து மக்களும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும் எனவும், இலங்கை வாழ் மக்களாகிய நாம் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என இந்த வெசாக் பௌர்ணமி தினத்தில் ஆசீர்வாதம் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் வட மாகாண கடற்படைத் தளபதி, வடமாகாண விமானப்படைத் தளபதி, யாழ் மாவட்ட 51 வது படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி, 512 ஆவது படைப்பிரிவின் இராணுவ தளபதி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் , உதவி மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டனர்.
 

Leave a Reply