புதுவை அண்ணா சாலையில் புதிய நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை ராஷி கண்ணா நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் நடைபெற்ற பல திரைப்பட சூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறேன். தற்போது புதுவையில் புதிய நகைக்கடை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகி இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. முதலமைச்சர் பதவிக்கு தகுதியான நபர் விஜய். மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியை அவர் கொடுப்பார் என தெரிவித்தார்.


