TamilsGuide

லண்டன் Golders Green பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் இன்று (27) காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் குறைந்தது பத்து தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று (27) காலை 6.47 மணிக்கு தீ விபத்து தொடர்பான அழைப்பு வந்ததாகவும், இதையடுத்து ஃபின்ச்லி, வில்ஸ்டன், வெஸ்ட் ஹாம்ப்ஸ்டெட் மற்றும் சுற்றியுள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தீயணைப்புப் படை குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து, கோல்டர்ஸ் கிரீன் சாலை மற்றும் பெவர்லி கார்டன்ஸ் சந்திப்புக்கு அருகிலுள்ள பகுதிகள் உட்பட தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகே பல சாலைகள் மூடப்பட்டுள்ளன.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் வரை அப்பகுதியைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை லண்டன் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களில், கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் உள்ள சமூகம் பல தீ விபத்துகளைச் சந்தித்துள்ளது. அவற்றில் ஒன்று, யூத அம்பியூலன்ஸ் சேவை மீது நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல் ஆகும், இது ஒரு வெறுப்புக் குற்றமாகக் கருதப்படுகிறது.


 

Leave a comment

Comment