யோகி பாபு நடிக்கும் புது படம் குறித்து வெளியான அப்டேட்
சினிமா
நடிகர் ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து, ஆர்.கிஷோர் குமார் எழுதி இயக்கும் படத்தில் நடிகர் யோகி பாபு நடிக்க உள்ளார். இப்படத்தில் முதல் முறையாக யோகி பாபு பத்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், யோகி பாபு ஒரு உளவாளி போன்ற உடையில் மிலனில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்பாக நிற்கிறார்.
வரவிருக்கும் இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். 9 லைட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அவர் ஏற்கவிருக்கும் கதாபாத்திரங்கள், கதைக்களம் மற்றும் உத்தேச வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட விவரங்கள் தற்போது தெரியவில்லை.
முன்னதாக, சுரேஷ் சங்கையா எழுதி இயக்கிய சமூக நையாண்டிப் படமான ' கெணத்த காணோம்' படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருந்தார். அடுத்து, ரஜினிகாந்தின் ' ஜெயிலர் 2' , அல்லு அர்ஜுன்-அட்லீயின் 'ராக்கா' ரவி மோகனின் முதல் இயக்கமான 'ஆன் ஆர்டினரி மேன்' உள்ளிட்ட பல படங்கள் யோகி பாபு கைவசம் உள்ளன.























