TamilsGuide

கனேடிய தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கும் கனடாவிற்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கனேடிய உயர்ஸ்தானிகரான இசபெல் கெத்தரின் மார்ட்டின் ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் நீடித்த இன நல்லிணக்கம் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடியிருந்தார்.

இதேவேளை மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாக காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது குறிப்பிட்டிருந்ததுடன்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதியான அரசியல் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment

Comment