• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மொரகல்ல கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்பு

இலங்கை

அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில், ஆன் ஒருவரின் உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

அளுத்கம பொலிஸாருக்கு இன்று (23) காலை கிடைத்த தொலைபேசி அழைப்புக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த மனித தலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் இது ஒரு ஆணின் தலை என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது அடையாளம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply