TamilsGuide

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்

பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் நேற்று (21) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால அவர்களின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பிரதி அமைச்சர் சுனில் வட்டகல , பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
பொலிஸ் மா அதிபர், பிரியந்த வீரசூரிய மேல் மற்றும் சபரகமுவ, ஊவா,மத்திய, தென்மாகாணங்களுக்குரிய
பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பெருந்தோட்ட கம்பெனிகளின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இந்த கலந்துரையாடலின்போது பெருந்தோட்டத் துறையில் நிலவும் பாதுகாப்பு சவால்கள், அடக்குமுறைகள், தொழிலாளர் நலன் மற்றும் சட்ட ரீதியான அணுகுமுறைகள் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், சில முக்கிய முடிவுகளும் எட்டப்பட்டன.

இதன்படி, தோட்டப்பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு அமைக்கப்படவுள்ளதோடு மேலும், மலையக மக்களின் பாதுகாப்புக்கான விசேட குழு ஒன்றும் விரைவில் நிறுவப்படவுள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்கள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொண்டு தோட்ட மக்கள் மீது அடக்குமுறைகளை மேற்கொள்வது குறித்து பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தோட்ட நிர்வாகங்களுக்கு தமது கண்டனத்தை தெரிவித்தார்.

இதன்போது பெருந்தோட்ட மக்களின் காணி பிரச்சினைக்குத் தீர்வு காண விசேட குழு ஒன்று நிறுவப்பட்டு, ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
 

Leave a comment

Comment