TamilsGuide

நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம் – அமைச்சர் சுனில் செனவி தெரிவிப்பு

நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்.

பண்டங்கள் கணக்கெடுப்புச் சபை ஒன்றின் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டில் தேசிய கலைக்கூடத்தின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பின்னரே குறித்த காணாமல் போனமை தொடர்பான தகவல்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, இருப்புப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த ஓவியங்களின் எண்ணிக்கை 281 ஆக இருந்தபோதிலும், தற்போது கலைக்கூடத்தில் 239 ஓவியங்கள் மாத்திரமே உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment