TamilsGuide

சீனாவில் நிலநடுக்கம் இருவர் உயிரிழப்பு - 7000 பேரை வெளியேற்றும் நடவடிக்கை

சீனாவில் ஏற்பட்ட 5.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இருவர் உயிரிழந்துள்ளதோடு அங்கு வசிக்கும் 7000 பேரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை சீனாவில் இச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள், கட்டடங்கள் ஆகியன குலுங்கின.

இந்த நிலநடுக்கத்தால், சுமார் 13 கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ள நிலையில், அதிர்வுகளால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு அங்குள்ள ஏராளமான வீதிகள் முடங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.  
 

Leave a comment

Comment