TamilsGuide

மலையக மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அடக்குமுறைகளுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

மலையக மக்களுக்கு எதிராக இடம் பெருகின்ற அடக்கு முறைகளுக்கு அமைச்சும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்குமென பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார் .

வெள்ளிக்கிழமை மாலை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார் .

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ,

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வாழுகின்ற மக்களுக்கு பெருந்தோட்ட நிறுவனங்களினால் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக பேசப்பட்டு வருகிறது இது போன்ற சம்பவங்கள் இன்று நோற்று அல்ல தொடர்சாசியாக இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதை பார்த்து கொண்டு வருகின்றோம் .

ஏப்ரல் மாதம் 24ம் திகதி இரத்தினபுரி காவத்த நீலகாமம் பிரதேசத்தில் தொழிலாளி ஒருவர் தனக்கான வீட்டினை அமைத்திருந்த போது அந்த தோட்ட நிருவாகம் தனியார் பாதுகாப்பு பிரிவினரை மேற்கொண்டு அந்த வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது அந்த தொழிலாளர்கள் மீது தாக்குதலையும் மேற்கொண்டிருந்தார்கள். இந்த விடயத்தினை அரிந்த உடனே சட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்

சம்பவம் இடம்பெற்று சுமார் 06மணித்தியாலயத்திற்குள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 09பேர் கொண்ட குழுவினரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பட்டனர் அதன் பிறகு சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக அமைச்சின் ஊடாக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கின்றன குறித்த தோட்டத்தில் உள்ள 20குடும்பங்களுக்கும் கானிகளை வழங்க அந்த பெருந்தோட்ட நிறுவனம் இனக்கப்பாட்டுக்கு வந்துள்ளது .

இம் மாதம் 06ம்திகதி பெரிய மஸ்கெலியா மொக்கா தோட்டப் பகுதியில் தோட்ட முகாமையாளரினால் காவலாளி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நாங்கள் முன்னெடுத்த நடவடிக்கை ஊடாக தாக்குதல் நடாத்திய முகாமையாளர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்ட போது அவர் பினையில் விடுவிக்கப்பட்டார் அதேபோல் நுவரெலியா மாவட்டத்தில் டெல்மா தோட்டத்திலும் அங்குள்ள முகாமையாளரினால் தொழிலாளி ஒருவர் தாக்கப்பட்டார் தாக்கப்பட்ட தொழிலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் முகாமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் அங்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது இரத்தினபுரி பெல்மடுல நாரங்கல தோட்டத்தில் அங்கு வசிக்கும் ஒரு தொழிலாளி வீடு ஒன்றினை அமைத்த போது அந்த வீடு முகாமையாளரினால் உடைக்கப்பட்டது அங்கு பிரதி அமைச்சர் என்ற ரீதியில் களவிஜயமொன்றை மேற்கொண்டு அந்த தனியார் தோட்டத்தில் அந்த பிரஜைக்கான வீட்டினை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் நுவரெலியா உடபுஸ்ஸலாவ சென்மாக்ரெட் தோட்ட பகுதியில் ஓய்வு பெற்ற தொழிலாளி ETF பணத்தை பெற்றுக்கொள்வதற்காக தன் மகனுடன் தோட்ட காரியாலயத்திற்கு சென்றிருந்த போது அங்கு வாய்த்தர்க்கம் அதிகரித்ததன் காரணமாக முகாமையாளர். உதவி முகாமையாளர்.

வெளிக்கள உத்தியோகத்தர் ஆகியோர் இனைந்து அந்த தொழிலாளின் மகனை தலை கவசத்தினால் கடுமையாக தாக்கியுள்ளனர் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளியின் மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூன்று பேரையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிமன்றம் குறித்த மூவருக்கு 05இலட்ச்சம் ரூபாய் சரீரபினையில் விடுவிக்கப்பட்டனர்.

இதுபோன்ற சம்பவங்கள் இன்று நேற்று அல்ல தொடர்ச்சியாக மலையக பகுதியில் இடம் பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது கடந்த காலங்களில் சமுகவலைதளங்கள் இல்லாத காலப்பகுதியில் இது போன்ற பிரச்சினைகள் வெளிவருவது குறைவாகவே காணப்பட்டது ஆனால் தற்போது சமுகவலைத்தளங்கள் காணப்படுகின்றமையால் இது போன்ற பிரச்சினைகளுக்கு சட்டம் தமது கடமைகளை செய்ய சமுகவலைத்தளம் உந்து சக்தியாக காணப்படுகிறது இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமல் இருக்க பெருந்தோட்ட கண்கானிப்பு பிரிவு எமது அமைச்சின் செயலாளருடன் இனைந்து விசாரணைகளை நாங்கள் தீவிரபடுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார் .
 

Leave a comment

Comment