புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
இதனால், அவருக்கு அவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் மேல் நீதிமன்றம் அவருக்கான சிறைத்தண்டனை உத்தரவினை இன்று (15) பிறப்பித்தது.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரர் ஜகத் சமந்த மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
தாக்குதலுக்கு உள்ளான பிரதேச சபை செயலாளருக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு ஜகத் சமந்தாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவர் அந்த இழப்பீட்டைச் செலுத்தத் தவறினால், மேலதிகமாக 24 மாதங்கள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
2024 ஜனவரி 25 அன்று கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் சனத் நிஷாந்தா உயிரிழந்தார்.
இதன் விளைவாக, இன்று அவரது சகோதரர் மட்டுமே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் வாதங்களையும் நீதிமன்றம் பரிசீலித்த பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.


