TamilsGuide

கடவத்தை – மீரிகம மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பகுதி 48% நிறைவு!

இறம்புக்கனை–கலகெதர நெடுந்தூரப் பகுதியை உள்ளடக்கிய மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் அடுத்தகட்டப் நிர்மாணப் பணிகளுக்காக 112 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் கடவத்த இடமாறலை நிறைவு செய்வதற்கும், 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் கடவத்த–மீரிகம சாலையை முடித்து அதனைப் பொது மக்களின் பவனைக்காக ஒப்படைப்பதற்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பட்டார்.

இந்தப் பகுதி நிறைவடைந்தவுடன், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையும், கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையும் வெளிவட்டச் சாலையின் வழியாக மத்திய அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டு, ஒரு தடையற்ற தேசிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு உருவாக்கப்படும்.

நெடுஞ்சாலையின் துறைமுக அணுகுசாலையின் பணிகள் நிறைவடைந்தவுடன், பொதுமக்கள் அதிவேக நெடுஞ்சாலைகள் வழியாக கொழும்பு, கட்டுநாயக்க, குருணாகல் மற்றும் மட்டால ஆகிய இடங்களுக்கு வசதியாகப் பயணிக்க முடியும் என்று அமைச்சு குறிப்பிட்டது.

Leave a comment

Comment