TamilsGuide

வடக்குமாண ஆளுநர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் – ரவிகரன் mp இடையில் விசேட சந்திப்பு

வடக்குமாண ஆளுநர், பிரதமசெயலாளர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரைச் சந்தித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய அபிவிருத்திப் பணிகள், தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (11) வடக்குமாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்குமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வடக்குமாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகர் ஆகியோரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்புக்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுடன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்மினர்களான மகாதேவா குணசிங்கராசா, ஜோசெப் மாசிலாமணி, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், வீரசிங்கம் கலைச்செல்வன், தவராசா அமலன், சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment