இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர், கனடா உயர்ஸ்தானிகர் ,கிழக்கு மாகாண ஆளுநர் இடையில் விசேட கலந்துரையாடல்
இலங்கை
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல்லா மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
அவை, மாகாணத்தில் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், மாகாணத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு எடுக்கப்பட்ட தீர்வுகள், மற்றும் மாகாணத்தின் தற்போதைய நிலைமை ஆகியவை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
























