TamilsGuide

நாடு கடத்தப்பட்ட 37 சீன நாட்டவர்கள்

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பெண்கள் உட்பட 37 சீன நாட்டினர் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அந்தக் குழுவினர், குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி, நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்தக் குழுவிற்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, சீனாவைச் சேர்ந்த 11 பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழுவும் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்திருந்தது.

நாடு கடத்தப்பட்டவர்கள் நேற்று இரவு (04) 10:50 மணிக்கு, சீனாவின் குன்மிங் நோக்கிச் சென்ற சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் MU-714 இல் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Leave a comment

Comment